செம்ஸ்போர்டு பிரபு

செம்ஸ்போர்டு பிரபு..!

மாண்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம்..!

bz famousmen,

புகழ் பெற்ற மனிதர்கள்,


செம்ஸ்போர்டு பிரபு..!

◆ செம்ஸ்போர்டு பிரபு (12 ஆகஸ்டு 1868 – 1 ஏப்ரல் 1933) பிரித்தானியப் பேரரசின் அரசியல்வாதியும், பிரித்தானிய காலனி ஆதிக்க நாடுகளின் ஆளுநரும் ஆவார்.

பெயர்: 

செம்ஸ்போர்டு

பதவி: 

பதவி : வைஸ்ராய் மற்றும் இந்தியத் தலைமை ஆளுநர்

காலம் : 

4 ஏப்ரல் 1916 – 2 ஏப்ரல் 1921

முன்னவர்: 

அரசர் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்

முன்னவர் :

வாரன் ஹேஸ்டிங்ஸ்

பின்வந்தவர்:

ஐசக் 22வது (ஆளுநர், நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா)

பதவியில்:

28 மே 1909 – 11 மார்ச் 1913

அரசர் மன்னர் ஏழாம் எட்வர்டு

மன்னர் ஐந்தாம் ஜார்ஜ்

(லெப்டினன்ட் ஆளுநர், நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா|லெப்டினன்ட்)

சர் பிரடெரிக் டார்லி

சர் வில்லியம் கூல்லன்

முன்னவர்:

சர் ஹாரி ராவ்சன்

பின்வந்தவர் :

ஜெரால்டு ஸ்டிரிக்லாண்ட்

அட்மிரால்டியின் முதல் இறைவன்

பதவியில்பதவியில்:

28 சனவரி1924 – 7 நவம்பர் 1924

பிரதமர் இராம்சே மெக்டொனால்டு

முன்னவர்:

லியோ அமெரிக்கா

பின்வந்தவர் :

வில்லியம் பிரிட்ஜ்மேன்

தனிநபர் தகவல் :

பிறப்பு:

ஆகத்து 12, 1868

லண்டன், ஐக்கிய இராச்சியம்

இறப்பு:

1 ஏப்ரல் 1933 (அகவை 64)

லண்டன், ஐக்கிய இராச்சியம்

தேசியம் :

ஐக்கிய இராச்சியம்

வாழ்க்கை துணைவர்(கள்)

தமே பிரான்செஸ் சார்லொட்டி கெஸ்ட்

படித்த கல்வி நிறுவனங்கள்:

மெக்தலான் கல்லூரி, ஆக்ஸ்போர்டு

தொழில்:

அரசியல்வாதி, பிரித்தானிய காலனிகளின் நிர்வாகி

சமயம் :

இங்கிலாந்து திருச்சபை செம்ஸ்போர்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஆளுநராகவும், (1905 - 1909), நியூ சௌத் வேல்ஸ் மாகாண ஆளுநராகவும் (1909 - 1913),

★ முதல் உலகப் போருக்குப் பிறகு 29 பிப்ரவரி 1916ல் கோமறை மன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். 

★ பின்னர் பிரித்தானிய இந்தியாவில் 1916 முதல் 1921 முடிய வைஸ்ராயாக பணியாற்றியவர்.

★ 1919ல் வைஸ்ராய் செம்ஸ்போர்டு, மாண்டேகுவுடன் இணைந்து அறிவித்த மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களால் நன்கு அறியப்பட்டவர்.

★ இவரது சீர்திருத்தங்களின் படி, இந்தியர்களுக்கு அரசியலில் படிப்படியாக பொறுப்புகள் வழங்கப்பட்டது. 

★ கிறித்தவர்கள், இசுலாமியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலோ இந்தியர்களுக்கு அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

★ இந்திய விடுதலைப் போராட்டங்களை அடக்க வேண்டி, இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டு மார்ச், 1919ல் ரௌலட் சட்டத்தை கொண்டு வந்தார். 

★ இச்சட்டப்படி, எவரையும் ஆதாரம் அல்லது விசாராணையின்றி கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்பதால், இச்சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது.

★ ரௌலட் சட்டத்திற்கு எதிராக அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் 13 ஏப்ரல் 1919ல் கூடிய, ரெசினால்டு டையர் தலைமையிலான ஆங்கிலேயப் படைகள் சுட்டதில், 379 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

★ செம்ஸ்போர்டு ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் பிரித்தானியப் பேரரசின் தலைமை முகவராக பணியாற்றினார்.


சீர்திருத்தங்கள் :

★ செம்ஸ்போர்டு பிரபு, வைஸ்ராய் எட்வின் சாமுவேல் மாண்டேகு, பிரித்தானிய இந்திய அரசின் தலைமைச் செயலர் பிரித்தானிய இந்திய அரசின் தலைமைச் செயலாளர் எட்வின் சாமுவேல் மாண்டேகு, இந்தியர்களுக்கு வரையறுக்கப்பட்ட அரசியல் சுயாட்சி வழங்குவதற்கு வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபு மற்றும் விடுதலை இயக்கத் தலைவர்களுடன் கலந்து கொண்டு பேசினார்.

★ பின்னர் புபேந்திரநாத் போஸ், ரிச்சர்டு ஹேலி-ஹட்சின்சன், வில்லியம் டியூக் மற்றும் சார்லஸ் வென்றி ராபர்ட் ஆகியோருடன் கலந்துரையாடி மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் எனும் பெயரில் அறிக்கை 1917ஆம் ஆண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டது. 

★ மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த அறிக்கை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இந்தியர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்கும் இந்திய அரசுச் சட்டம், 1919 நிறைவேற்றப்பட்டது. 

★ இச்சட்டப்படி 1921ல் சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் பஞ்சாயத்து மாகாணங்களில் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் நிறுவப்பட்டன. 

★ பின்னர் 1932 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசம், பிகார், ஒரிசா மற்றும் அசாம் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களுக்கும் இந்திய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட சட்டமன்றங்கள் அமைக்கப்பட்டன. 

★மேலும் பிரித்தானிய இந்தியாவின் மத்திய அரசு மற்றும் இந்திய மாகாண அரசுகளின் அதிகாரங்கள்,கடமைகள், பொறுப்புகள் வரையறுக்கப்பட்டது. 

★இதன் படி, பிரித்தானிய இந்தியாவின் மத்திய அரசிற்கு இராணுவம், வெளியுறவுத் துறை, தொலைதொடர்புத் துறை, அஞ்சல் துறை, வெளிநாட்டு வணிகம், இரயில்வே முதலிய முக்கியத் துறைகளும்; இந்திய மாகாண அரசுகளுக்கு மருத்துவம், சுகாதாரம், கல்வி, பொதுத்துறை, நீர்பாசனம், காவல் துறை, சிறைத்துறை, நீதித்துறை, உள்ளாட்சித் துறை முதலிய துறைகள் ஒதுக்கப்பட்டன.

★ மாகாண அரசுக்கு ஒதுக்கப்படாத துறைகளை மைய அரசே கவனிக்கும்.


★ மாகாண அரசுகள் எடுக்கும் தீர்மானங்களுக்கு மாகாண ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டும். 

★இல்லை எனில் மாகாண அரசுகள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைக்கு வராது.

★ 1920ல் உள்ளாட்சி நிர்வாகத்தை உள்ளூர் இந்திய மக்களின் பிரதிநிதிகள் நிர்வகிக்கும் நகராட்சி, மாநகராட்சி மன்றங்கள் அமைக்க மாண்டேகு-செம்ஸ்போர்டு குழு அறிக்கையாக தயாரிக்கப்பட்டது.

★ பிரித்தானிய அரசுக்கு பரிந்துரை. 1921ல் கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்துக் குழுக்கள் அமைக்கப்பட்டது.

மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் இதர சீர்திருத்தங்கள் :

★ பிரித்தானிய இந்திய அரசின் நிர்வாகத்தை இந்தியச் செயலர் நடத்த வேண்டும்.

★ இந்திய நாடாளுமன்ற மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் இருக்க வேண்டும்.

★ இந்திய நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் இந்தியா முழுமைக்கும் செல்லுபடியாகும்.

★ இந்தியத் தலைமை ஆளுநருக்கு மாகாண சட்டமன்றங்களை கலைக்கும் அதிகாரம் மற்றும் மாகாணங்களில் அவரசர நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம்.

★இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவின் எட்டு உறுப்பினர்களில் மூவர் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

★ மாகாண சட்டமன்ற மேலவை மற்றும் கீழவை என இரண்டு அவைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.


இந்தியாவில் எதிர்ப்பு :

★ மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் இந்தியாவில் பிரித்தானிய அரசிற்கெதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது.

★ மகாத்மா காந்தி பிரித்தானிய அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் எனும் போராட்டத்தை துவக்கினார்.

★ பிரித்தானிய அரசின் எதிர்ப்பாளர்களை அடக்க ரௌலட் சட்டத்தின் படி, விசாரணை சிறையில் அடைத்தனர்.

★ ரௌலட் சட்டத்திற்கு எதிராக, ஏப்ரல், 1919ல் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரத்தின் ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது முன்னறிவிப்பு ஏதும் இன்றி பிரித்தானியா இராணுவத்தினர் சுட்டதில் 376 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

★ ஜாலியன்வாலா பாக் படுகொலை காரணமான ரெசினால்டு டயர் மீது ஹண்டர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

★ ஜாலியன்வாலா பாக் படுகொலையால், இந்தியா முழுவதும் பிரித்தானிய அரசிற்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றது.

★ 1920ல் இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில் முழுமையான சுயாட்சி கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


சீராய்வு :

★ சைமன் மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை மறு ஆய்வு செய்ய சைமன் குழு அமைக்கப்பட்டது. 

★ இந்தியர்களின் முழு சுயாட்சி கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய லண்டனில் 1930, 1931, 1932 ஆகிய மூன்று வட்டமேசை மாநாடுகள் நடைபெற்றன.

★ மகாத்மா காந்தி 1931ல் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்.

★ வட்ட மேடை மாநாட்டின் முடிவுகளின் படி, இந்திய அரசுச் சட்டம், 1935 நிறைவேற்றப்பட்டது.

★ இதன் படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

கௌதம புத்தர் | Gautama Buddha

டாக்டர் ராஜேந்திர பிரசாத்..!